சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும், அணுசக்தி சரக்குகளை ஏற்றிச் சென்ற  கப்பல் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தம்!
Jul 29, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும், அணுசக்தி சரக்குகளை ஏற்றிச் சென்ற  கப்பல் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு உதவும் நோக்கில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள், மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ பயன்பாட்டு பொருட்கள் அனுப்பப்பட்ட சரக்குகளை இந்திய துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த வகையில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தும் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் சரக்கு கப்பலில் அனுப்பப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் மால்டா நாட்டு கொடியுடன் கடந்த மாதம் 23ம் தேதி வந்த சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், இத்தாலி நிறுவனத்தின் தயாரிப்பான கம்ப்யூட்டர் நியூமரிகல் கன்ட்ரோல் மெஷின் (சிஎன்சி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த கருவியை வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம்.

எனவே, பாகிஸ்தானில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களுக்காக இந்த சரக்குகள் சீன நிறுவனத்தில் இருந்து கராச்சிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். சிஎன்சி கருவிகள், சர்வதேச ஆயுத கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வருபவை. எனவே, 22,180 கிலோ எடையுள்ள இந்த சரக்குகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மும்பை துறைமுகத்தில் முடக்கப்பட்ட சீன – பாகிஸ்தான் கப்பலில் சரக்குகளை ஆய்வு செய்து, அதில் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்துக்கான பயன்பாட்டை இந்தியாவின் டிஆர்டிஓ குழு சரிபார்த்தது.

’ஷாங்காய் ஜேஎக்ஸ்இ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்’ என்ற சீன நிறுவனத்திடமிருந்து, பாகிஸ்தானின் ‘பாகிஸ்தான் விங்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற முகவரி சரக்கினை கொண்டு செல்வதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்திய ஏஜென்சிகளின் சோதனையில் இந்த சரக்கு பாகிஸ்தானில் உள்ள ’காஸ்மோஸ் இன்ஜினியரிங்’ நிறுவனத்திற்காக செல்வது கண்டறியப்பட்டது.

சர்வதேசளவில் கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் இந்த் காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கு, அது குறித்தான கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக அடையாளங்களை மறைத்து, சீனாவை ஒரு வழித்தடமாக பயன்படுத்தியதை ஏற்கனவே இந்தியா கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: mumbaiA ship carrying nuclear cargo from China to Pakistan was stopped!
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies