தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாங்கல்ய பலம் பெறுவதற்காக திருமணமான பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும்.

காரடையான் நோன்பு :

மாசி மாதம் முடியும் நாளும் பங்குனி மாதம் பிறக்கும் நேரமும் கூடுகிற நன்னாளில் காரடையான் நோன்பு எனும் விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து வீட்டில் வழிபாடு செய்து மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொண்டால் கணவனுக்கு ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டு வரும் காரடையான் நோன்பு அம்பிகைக்குரிய பஞ்சமி திதியுடன் இணைந்து வருவதால் இது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.

அதேபோல் சதுர்த்தி திதி, சஷ்டி திதி, பஞ்சமி திதி என மூன்று திதிகளும் சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு கருதப்படுகிறது.

இந்த காரடையான் நோன்பை திருமணமான சுமங்கலி பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணமாகாத கன்னிப்பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு சுமங்கலி வரம் கிடைக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கணவன் அமையவும், இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

வரலாறு :

சாவித்திரி தன் கணவர் சத்தியவானை எமதர்மனிடமிருந்து மீட்டெடுத்ததைக் கொண்டாடும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

கணவன் சத்தியவான், எமனின் பாசக் கயிற்றில் சிக்கி இருப்பதை தெரிந்து கொண்ட சாவித்ரி, காமாட்சி அன்னையை நோக்கி கடும் விரதம் இருந்தாள். இந்த விரதத்தின் பலனால் எமலோகத்தின் வாசல் வரை சென்று, எமனுடன் போராடி பல வரங்களை பெற்றாள்.

அப்படி சாவித்ரி தனது அறிவின் திறமையால் பெற்ற ஒரு வரத்தின் பலனாக தனது கணவரின் உயிரையும் எமனிடம் இருந்து மீட்டு, தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசியையும் பெற்றார். இந்த நாளில் நாமும் அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டால் நம்முடைய தாலி பாக்கியம் பலப்படும், கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை.

கடைபிடிக்கும் முறை :

விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள காமாட்சி அம்பாளின் படம் அல்லது ஏதாவது அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு இலை போட்டு அதன் மீது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பூஜை ஆகிய தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும்.

பிறகு மாற்றிக் கொள்ள வேண்டிய மஞ்சள் சரடில் சிறிது பூ சுற்றி அந்த இலையில் வைக்க வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதிலும் பூ சுற்றி இலையில் வைக்க வேண்டும்.

நைவேத்தியமாக அரிசி மாவு மற்றும் காராமணி சேர்த்து செய்யும் கார அடை மற்றும் வெள்ளை அடை செய்து படைக்க வேண்டும். கடைசியாக மிக முக்கியமாக உருவாக வெண்ணெய் சிறிதளவாவது அந்த இலையில் வைத்து அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களை சொல்லி வழிபட வேண்டும்.

பூஜை முடித்த பிறகு மஞ்சள் சரடினை மாற்றிக் கொள்ளலாம். மஞ்சள் சரடு மாற்றும் வழக்கம் இல்லாதவர்கள் நோன்பு கயிறை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம்.

நல்ல நேரம் :

இந்த வருடம் காரடையான் நோன்பு மார்ச் 14 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளில் காலை 06.40 முதல் பகல் 12.48 வரை நோன்பு கடைபிடிக்க வேண்டும். அதாவது 6 மணி நேரம் 11 நிமிடங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மஞ்சள் சரடு மாற்றும் பழக்கம் உள்ளவர்கள் பகல் 12.40 மணி வரையிலான நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

மந்திரம் :

காரடையான் நோன்பு அன்று சொல்லவேண்டிய மந்திரம்.

1. உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்

2. தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா.

ஒரு பெண் நினைத்தால் தன்னையும் தன் கணவனையும் காப்பாற்றி விடுவாள் என்பதை சாவித்திரியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிட்டது.

Tags: Karadayan fast which gives blessing to solve Sumangali!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவை தேர்தல் 2024 : பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

Google chrome பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies