ருத்ரஜிக்கு வாழ்த்து கூறிய சூரிய குமார் யாதவ் : ஹர்திக் பாண்டியாவுக்கு ஏன் கூறிவில்லை?
Apr 29, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ருத்ரஜிக்கு வாழ்த்து கூறிய சூரிய குமார் யாதவ் : ஹர்திக் பாண்டியாவுக்கு ஏன் கூறிவில்லை?

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருத்ரஜிக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஆனால் இதுவரை அவர், அவர் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் அனைத்து கேப்டன்களையும் ஒன்றிணைத்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருந்தார்.

பின்னர் அதிகாரபூர்வமாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. சிஎஸ்கே அணியின் ரசிகர்களே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீ மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால் உனது அமைதியான குணத்தின் மூலமாக சிஎஸ்கே அணியின் புகழையும், பாரம்பரியத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. அதிர்ஷ்டமும் உன்னுடன் இருக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட 5 நிமிடத்திலேயே மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் வாழ்த்தி இருக்கிறார்.

ஆனால் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் ஹர்திக் பாண்டியா பற்றி இதுவரை சூர்யகுமார் யாதவ் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. இதன் மூலமாக மும்பை அணியின் கேப்டன்சி விவகாரத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

Tags: Suriya Kumar Yadav congratulated Rudraji: Why didn't you tell Hardik Pandya?
ShareTweetSendShare
Previous Post

அமேசான் மழைக்காட்டில் அழிந்துப் போன டால்பின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

Next Post

அன்புக்குரிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி – அண்ணாமலை நெகிழ்ச்சி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies