பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசின் முயற்சியால்  வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கி இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 2014ல், ரிசர்வ் வங்கியின் 80 ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, நிலைமை மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வங்கித் துறையும் சிக்கல்கள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது.

இந்தியாவின் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போதிய ஊக்கத்தை பொதுத்துறை வங்கிகளால் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என தெரிவித்தார்.

ஆனால் இன்று உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளது. வங்கித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். பொதுத்துறை வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த, பாஜக அரசு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்தது என்றும் அவர் கூறினார்.

வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணயப் பரிமாற்றத்தின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளது. UPI ஆனது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 1200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.

10 ஆண்டுகளில், வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணய பரிமாற்றம் ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். ரொக்கமில்லா பொருளாதாரத்தின் சேனல்களைக் கண்காணித்து, நிதி உள்ளடக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கடந்த தசாப்தத்தில் ரிசர்வ் வங்கி அடைந்துள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், அரசாங்கத்தின் முயற்சிகளில் நேர்மை மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக வங்கி அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags: PM Modimumbairbi function
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்! – ராமதாஸ் குற்றச்சாட்டு

Next Post

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies