பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!
Jun 16, 2026, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசின் முயற்சியால்  வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கி இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 2014ல், ரிசர்வ் வங்கியின் 80 ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, நிலைமை மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வங்கித் துறையும் சிக்கல்கள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது.

இந்தியாவின் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போதிய ஊக்கத்தை பொதுத்துறை வங்கிகளால் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என தெரிவித்தார்.

ஆனால் இன்று உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளது. வங்கித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். பொதுத்துறை வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த, பாஜக அரசு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்தது என்றும் அவர் கூறினார்.

வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணயப் பரிமாற்றத்தின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளது. UPI ஆனது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 1200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.

10 ஆண்டுகளில், வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணய பரிமாற்றம் ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். ரொக்கமில்லா பொருளாதாரத்தின் சேனல்களைக் கண்காணித்து, நிதி உள்ளடக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கடந்த தசாப்தத்தில் ரிசர்வ் வங்கி அடைந்துள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், அரசாங்கத்தின் முயற்சிகளில் நேர்மை மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக வங்கி அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags: PM Modimumbairbi function
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்! – ராமதாஸ் குற்றச்சாட்டு

Next Post

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies