பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!
Aug 1, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக அரசின் முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்துள்ள வங்கி அமைப்பு : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசின் முயற்சியால்  வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கி இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 2014ல், ரிசர்வ் வங்கியின் 80 ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, நிலைமை மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வங்கித் துறையும் சிக்கல்கள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது.

இந்தியாவின் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போதிய ஊக்கத்தை பொதுத்துறை வங்கிகளால் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என தெரிவித்தார்.

ஆனால் இன்று உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளது. வங்கித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். பொதுத்துறை வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த, பாஜக அரசு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்தது என்றும் அவர் கூறினார்.

வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணயப் பரிமாற்றத்தின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளது. UPI ஆனது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 1200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.

10 ஆண்டுகளில், வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணய பரிமாற்றம் ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். ரொக்கமில்லா பொருளாதாரத்தின் சேனல்களைக் கண்காணித்து, நிதி உள்ளடக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கடந்த தசாப்தத்தில் ரிசர்வ் வங்கி அடைந்துள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், அரசாங்கத்தின் முயற்சிகளில் நேர்மை மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக வங்கி அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags: PM Modimumbairbi function
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்! – ராமதாஸ் குற்றச்சாட்டு

Next Post

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies