திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!
Jun 12, 2026, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி.சிங்கின் 29 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் செந்தில் பாலாஜி, டெல்லியில் மணிஷ் சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமாக கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

கே.டி.சிங்கின் அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் அதிக வருமானத்தை வழங்குவதாகவும், பொதுமக்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதம் தவிர கூடுதலாக வீட்டு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாக கூறி அந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ, உத்தரப் பிரதேச காவல் துறை மற்றும் மேற்குவங்க காவல் துறை ஆகியவை வழக்குகளைப் பதிவு செய்தன.

அதனடிப்படையில் பணமோசடி சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை (ஈ.டி) நடத்திய விசாரணையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

பீச்கிராஃப்ட் விமானம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அந்த குழுத்துக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகள், சொத்துகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.29.45 கோடி என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை  அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 29 crore assets of Trinamool Congress former MP frozen!
ShareTweetSendShare
Previous Post

கயானாவிற்கு இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை வழங்கிய இந்தியா!

Next Post

திருப்பதியில் அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டம்!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies