போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் : அண்ணாமலை உறுதி!
Aug 17, 2026, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் : அண்ணாமலை உறுதி!

தமிழகத்துக்குத் திமுக வேண்டாம்: அண்ணாமலை பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நொய்யல் நதியை மீட்டெடுக்க பிரதமர் மோடி, 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடையார்பாளையம், கொங்கு நாடு கல்லூரி, அப்பநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2014 ஆம் ஆண்டு, 289 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதன்முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டு, 303 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மீண்டும் பாரதப் பிரதமராக பொறுப்பேற்பார் என்பது, குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் அறிந்த உண்மை.

இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாகப் பொலிவிழந்து இருக்கும் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க, நீர் நிலைகளைச் சீரமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய, தொழிற்சாலைகள், விவசாயிகள், தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க, கோவையின் சாலை வசதிக்கு, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு, மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கோயம்புத்தூர் மக்கள், பாதுகாப்பாக, நிம்மதியாக வசிக்க வேண்டும் என்பதற்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வையில் நமது கோவை என்றும் இருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நொய்யல் நதியை மீட்டெடுக்க, நமது பிரதமர் மோடி அவர்கள், 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். கோவை மக்கள் அன்பையும் ஆதரவையும் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும், அந்தப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதனைக் கண்காணித்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

ஜூன் 4, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த தினத்திலிருந்து நூறு நாட்களுக்குள், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். கல்லூரிகள் நிறைந்த கோவையில், நமது இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு, நமது கண் முன்னால் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, போதையில்லா கோயம்புத்தூர் நகரை உருவாக்குவோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட முதல் படியாக, இந்தத் தேர்தல் அமையும். தாமரைக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்துக்குத் திமுக வேண்டாம் என்பதைச் சொல்லும் வாக்குகள்.

கோயம்புத்தூருக்காக, கோயம்புத்தூர் பொதுமக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பினை உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலைக்கு வழங்குமாறும், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகவும், கோவையின் வளர்ச்சிக்காகவும் கோவை நாடாளுமன்றத் தொகுதியின், வாக்குப் பதிவு எந்திரத்தில் முதலில் இருக்கும் நமது தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
Share
Tweet
SendShare
Previous Post

ஹர்திக் மீது கடுப்பான ஆகாஷ் அம்பானி : காப்பாற்றிய சச்சின் – நடந்தது என்ன ?

Next Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Related News

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies