முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Jul 3, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருவாய் ஈட்ட இயலாத முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வங்கியில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

அந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணின் கணவர், தனது உடல்நிலை வருவாய் ஈட்டும் நிலையில் இல்லாததால், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து நிவாரணமாக மாதாந்திர பராமரிப்பு தொகை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வங்கி பெண் ஊழியர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவில், ”வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், தங்களின் குழந்தையை பராமரிப்பதற்கும் ஏற்கெனவே பொறுப்புகள் இருந்ததால், பராமரிப்பு தொகையை செலுத்த இயலவில்லை.

குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். எனவே, வருமான ஆதாரம் இல்லாததால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக்கின் ஒற்றை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24-ன் விதிகள் ‘துணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.

இது தன்னைத் தானே பராமரிக்க முடியாத கணவன் அல்லது மனைவியை உள்ளடக்கியது. வேலையில்லாத போது தன்னையும், தனது குழந்தையின் செலவுகளையும் மனுதாரர் எவ்வாறு கவனிக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும், வேலையில்லாததற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கணவர் தன்னைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில், வருமான ஆதாரத்தைக் கொண்ட மனைவி, இடைக்கால பராமரிப்பு தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags: The court ordered the woman to pay maintenance to her ex-husband!
ShareTweetSendShare
Previous Post

17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை! – சிக்கிமில் இந்திய ராணுவம் அதிரடி!

Next Post

வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies