முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருவாய் ஈட்ட இயலாத முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வங்கியில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

அந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணின் கணவர், தனது உடல்நிலை வருவாய் ஈட்டும் நிலையில் இல்லாததால், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து நிவாரணமாக மாதாந்திர பராமரிப்பு தொகை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வங்கி பெண் ஊழியர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவில், ”வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், தங்களின் குழந்தையை பராமரிப்பதற்கும் ஏற்கெனவே பொறுப்புகள் இருந்ததால், பராமரிப்பு தொகையை செலுத்த இயலவில்லை.

குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். எனவே, வருமான ஆதாரம் இல்லாததால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக்கின் ஒற்றை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24-ன் விதிகள் ‘துணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.

இது தன்னைத் தானே பராமரிக்க முடியாத கணவன் அல்லது மனைவியை உள்ளடக்கியது. வேலையில்லாத போது தன்னையும், தனது குழந்தையின் செலவுகளையும் மனுதாரர் எவ்வாறு கவனிக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும், வேலையில்லாததற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கணவர் தன்னைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில், வருமான ஆதாரத்தைக் கொண்ட மனைவி, இடைக்கால பராமரிப்பு தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags: The court ordered the woman to pay maintenance to her ex-husband!
Share
Tweet
SendShare
Previous Post

17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை! – சிக்கிமில் இந்திய ராணுவம் அதிரடி!

Next Post

வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies