திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு நிபந்தனைகளை மாநில வனத்துறை விதித்துள்ளதற்கு, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள வடக்குநாதன் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பூரம் திருவிழா வரும் 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதில், “யானைகளின் அணிவகுப்பு நடக்கும் இடத்தில் இருந்து 50 மீ., சுற்றளவில் மேளதாள வாத்தியங்கள், பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் யானைகளை 10 அடி துாரத்தில் நின்று ரசிக்கலாம். யானைப்பாகனை தவிர வேறு யாரும் யானைகளை தொடவோ, பராமரிக்கவோ அனுமதி இல்லை.

யானைகளுடன் வரும் யானைப்பாகன்கள், மதுபானம், போதைப் பொருள் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த, போலீசாரால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடப்பவர்கள், விழாவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவர்” என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வனத்துறையின் சுற்றறிக்கைக்கு கோவில் நிர்வாகத்தினர், விழாக்கமிட்டி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தேவசம் போர்டின் மூத்த உறுப்பினர் ஒருவர், ”வனத்துறையினரின் இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்றாகும்.

திருவிழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார், வனத்துறை உள்ளிட்டோர் ஏற்கனவே பேச்சு நடத்தி, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், வனத்துறையின் இந்த அறிவிப்பு பூரம் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: Kerala Forest Department imposes various restrictions on Thrissur Pooram festival!
Share
Tweet
SendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி?

Next Post

ராம நவமி விழா!- இந்திய தேர்தல் ஆணையம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies