திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு நிபந்தனைகளை மாநில வனத்துறை விதித்துள்ளதற்கு, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள வடக்குநாதன் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பூரம் திருவிழா வரும் 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதில், “யானைகளின் அணிவகுப்பு நடக்கும் இடத்தில் இருந்து 50 மீ., சுற்றளவில் மேளதாள வாத்தியங்கள், பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் யானைகளை 10 அடி துாரத்தில் நின்று ரசிக்கலாம். யானைப்பாகனை தவிர வேறு யாரும் யானைகளை தொடவோ, பராமரிக்கவோ அனுமதி இல்லை.

யானைகளுடன் வரும் யானைப்பாகன்கள், மதுபானம், போதைப் பொருள் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த, போலீசாரால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடப்பவர்கள், விழாவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவர்” என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வனத்துறையின் சுற்றறிக்கைக்கு கோவில் நிர்வாகத்தினர், விழாக்கமிட்டி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தேவசம் போர்டின் மூத்த உறுப்பினர் ஒருவர், ”வனத்துறையினரின் இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்றாகும்.

திருவிழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார், வனத்துறை உள்ளிட்டோர் ஏற்கனவே பேச்சு நடத்தி, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், வனத்துறையின் இந்த அறிவிப்பு பூரம் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: Kerala Forest Department imposes various restrictions on Thrissur Pooram festival!
ShareTweetSendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி?

Next Post

ராம நவமி விழா!- இந்திய தேர்தல் ஆணையம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies