திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 15, 2024, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து, மக்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏன்? இரவில் என்ன நடந்தது? என்பது பற்றி அண்ணாமலை பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று இரவு கோவையில் பல இடங்களில் அண்ணாமலை பிரசாரம் செய்தார். இரவு 10 மணி வரை தான் வேட்பாளர்கள், தலைவர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். இந்நிலையில் இரவு 10 மணி கடந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரச்சார வாகனத்தின் விளக்குகள் அணைக்கபட்டு, பாஜக தொண்டர்களை சந்திக்க சென்றார்.

இந்நிலையில்  திடீரென்று அங்கு சென்ற காவல்துறையினர் அண்ணாமலையின் காரை தடுத்தது நிறுத்தினர். இரவில் மணி 10யை தாண்டியதால் பிரசாரம் செய்ய அனுமதியில்லை எனக்கூறினர். அப்போது அண்ணாமலை தான் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தான் செல்கிறேன் என தெரிவித்தார். ஆனால் காவல்துறையினர் மாற்றுப்பாதையில் செல்ல அவரை அறிவுறுத்தினர்.

இதனால் அண்ணாமலை ஆக்ரோஷமாக,காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். பிரச்சாரம் செய்யாத நிலையில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 1 மணிநேரம் வரை சூலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‛‛அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி காவல்துறையினர் எங்கள் வாகனத்தை நிறுத்தினர்.

The excesses of the DMK Govt through the Police force have gone beyond limits as they stopped our Campaign vehicle yet again today for flimsy reasons.

The Police stopped our vehicle under the pretext that I was not allowed to campaign after 10 PM while travelling through a… pic.twitter.com/NqVYeAGw0F

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024

அப்போது நாங்கள் பிரசாரம் எதுவும் செய்வில்லை என்று கூறினோம்.  எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டது. பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறினோம். வாகனம் செல்லும் பாதையில் 2000 பாஜக தொண்டர்களை தான் கடந்து செல்ல உள்ளோம் என்றோம்.

ஆனால் காவல்துறையினரின் செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதுபற்றி காவல்துறையினரிடம் விளக்கியும் கூட அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினர். ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் தேர்தலில் 3 ஆண்டு காலமாக தவறான ஆட்சி வழங்கி வரும் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து, மக்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும், இந்த கொடிய திமுக அரசு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : பதக்கம் வென்ற இந்தியர்கள்!

Next Post

பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies