ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை சிறைக்கு வெளியே இருக்க விடமாட்டேன் என்றும், மீண்டும் பாஜக ஆட்சியமைந்ததும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸை சாடிய பிரதமர், தங்கள் கட்சியின் இளவரசரான ஷேக் ஷாஜஹானை பாதுகாப்பதற்காக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சந்தேஷ்காலி சகோதரிகளின் நடத்தையில் சந்தேகத்தை எழுப்புவதாக விமர்சித்தார்.
இந்த தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை, மேற்குவங்க மக்களே தோற்கடிப்பர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.