புதுச்சேரியின் 16வது சட்டபேரவையின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று கொண்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவராக அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த என்.ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, புதுச்சேரி மக்கள் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் ரங்கசாமியுடன் பாஜகவின் நமச்சிவாயமும், என்.ஆர்.காங்கிரசின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















