தனது தலைமையிலான தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக தவெக அரசின் மீது முன்மொழியப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
பிரேமலதா கூறிய குதிரை பேரம், ஜோதிடருக்கு அரசுப் பதவி பற்றி தான் பரிசீலனை செய்வதாக தெரிவித்த விஜய், முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்றும் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவு விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
















