தவெக ஆட்சி, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர்,நம்பிக்கை இல்லாததால் முதல்வர் இரண்டு இடங்களில் போட்டியிட்டதாக தெரிவித்தார். தொகுதி மக்களுக்கு இதுவரை நன்றி கூட விஜய் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் குதிரை பேரம் நடப்பதாக புகார் வருவதாகவும், பிளவுபட்ட அதிமுகவில் ஒரு பிரிவு வீட்டிற்கு முதல்வர் செல்கிறார் என்றும் சாடினார். இந்த ஆட்சி வாக்களித்த மக்களுடைய நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் சாடினார்.
















