ஐ.நா. பொதுச் செயலரின் பேரிடர் குறைப்பு பிரிவின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த கமல் கிஷோர் தனது பணியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்.
இதற்கு முன் இந்தப் பொறுப்பை வகித்த ஜப்பானை சேர்ந்த மாமி மிசுதோரி பணி ஓய்வு பெற்றதால், அந்த இடத்துக்கு கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் ஏற்கெனவே பணியாற்றிய கமல் கிஷோர், ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்த காலகட்டத்தில் பேரிடர் அபாய குறைப்பு பிரிவுக்குத் தலைமை வகித்ததும் குறிப்பிடத்தக்கது.