கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை அடுத்த மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் 20 -ஆம் ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி, பால்குடம், தீர்த்த குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர், கோவிலில் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.