மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!
Sep 13, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

Murugesan M by Murugesan M
May 28, 2024, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு, தடுப்பு சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

612 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மதுரை – நத்தம் பறக்கும் பாலம் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கான தளமாக மாறி வருகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, இரவு நேரங்களில் ரேஸ் செல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக சிலர் செய்யும் அட்டகாசங்களால், இந்த பாலத்தை பயன்படுத்தவே வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு கையில் மதுபாட்டில்களுடன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்று ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் ரோந்து வரும் நேரத்தை இவர்கள் அறிந்து வைத்திருப்பதால், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்று பொதுஇடங்களில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பறக்கும் பாலத்தில் சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Drunk on the Madurai-Nattam flyover!
Share
Tweet
SendShare
Previous Post

வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்தது!

Next Post

நடு வழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies