சிறை TO எம்பி ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கை!
Aug 8, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறை TO எம்பி ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையிலிருந்தபடியே வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் தீவிரவாதியின் மகன் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

14 மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் சார்பு பிரிவின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தப்பியோடிய அவரை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அமிர்த் பால் சிங், அசாமின் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2700 கிலோமீட்டர் தொலைவில் அசாம் சிறையில் இருந்தபடியே அம்ரித்பால் சிங் பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்பிர் சிங் கை விட 1 லட்சத்து 97 ஆயிரத்து 120 வாக்கு வித்தியாசத்தில் 4 லட்சத்து 4430 வாக்குகள் பெற்று அமிர்த் பால் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

அம்ரித்பால் சிங் மீது பஞ்சாபின் பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள அமிர்த் பால் சிங்குக்கு ஆதரவாக அவரது பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

போதைப்பொருள் பிரச்சனை மற்றும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.

காலிஸ்தான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கவனமாக பிரச்சாரம் செய்த நிலையில் அமிர்த் பால் சிங் வெற்றிபெற்றிருக்கிறார்.

அதே போல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைக் குற்றவாளியின் மகனான சரப்ஜீத் சிங் கல்சா, ஃபரித்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங்கை விடவும் 70,053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

பஞ்சாபின் ஃபரித்கோட் தொகுதியில் போட்டியிடும் சரப்ஜீத் சிங் கல்சா தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை அல்ல.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியிலும் , 2007 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்ற கல்சா இம்முறை வெற்றிபெற்றுள்ளார்.

இவரது தாயார் , ஏற்கெனவே 1989ம் ஆண்டு ரோபார் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறையில் இருந்தபடியே காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் 4 லட்சத்து 72481 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவை கிட்டத்தட்ட 2 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துளளார் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டில் தேச விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்துக்காக அவரது மகன்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தந்தையை வெற்றிபெற செய்துள்ளனர்.

சீக்கியர் பிரச்னைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்த சரப்ஜீத் சிங் கல்சாவும், போதைப்பொருள் பிரச்சனைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்த அமிர்த் பால் சிங்கும், காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்து பிரச்சாரம் செய்த ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய மூவரும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் வெற்றி அம்ரித்பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய இருவரையும் சிறையில் இருந்து வெளியே வர அனுமதியளிக்குமா ? என்பது இன்னும் தெரியவில்லை.

பொதுவாக , கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றால், நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் என்றும், சிறையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது உதவி ஆணையர் பொறுப்பிலான காவல்துறை அதிகாரிகள் உடன் செல்லவேண்டும் என்றும், நாடாளுமன்றஅதிகாரிகள் மற்றுமு் சக உறுப்பினர்கள் தவிர பிறரை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதால், அமிர்த் சிங் பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் மிதவாத அரசியலை கடைபிடிப்பார்களா ? அல்லது தீவிரவாதத்தை ஆதரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி தீவிரவாதிகள் ஜனநாயக ரீதியில் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று, முன்னாள் காவல் துறை தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

Tags: Khalsason of Indira Gandhi assassinwins in Faridkot constituency
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தானில் பாஜகவை வீழ்த்திய சாதிய வாக்குகள்!

Next Post

ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies