சிறை TO எம்பி ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கை!
Jun 24, 2026, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறை TO எம்பி ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையிலிருந்தபடியே வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் தீவிரவாதியின் மகன் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

14 மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் சார்பு பிரிவின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தப்பியோடிய அவரை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அமிர்த் பால் சிங், அசாமின் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2700 கிலோமீட்டர் தொலைவில் அசாம் சிறையில் இருந்தபடியே அம்ரித்பால் சிங் பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்பிர் சிங் கை விட 1 லட்சத்து 97 ஆயிரத்து 120 வாக்கு வித்தியாசத்தில் 4 லட்சத்து 4430 வாக்குகள் பெற்று அமிர்த் பால் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

அம்ரித்பால் சிங் மீது பஞ்சாபின் பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள அமிர்த் பால் சிங்குக்கு ஆதரவாக அவரது பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

போதைப்பொருள் பிரச்சனை மற்றும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.

காலிஸ்தான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கவனமாக பிரச்சாரம் செய்த நிலையில் அமிர்த் பால் சிங் வெற்றிபெற்றிருக்கிறார்.

அதே போல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைக் குற்றவாளியின் மகனான சரப்ஜீத் சிங் கல்சா, ஃபரித்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங்கை விடவும் 70,053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

பஞ்சாபின் ஃபரித்கோட் தொகுதியில் போட்டியிடும் சரப்ஜீத் சிங் கல்சா தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை அல்ல.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியிலும் , 2007 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்ற கல்சா இம்முறை வெற்றிபெற்றுள்ளார்.

இவரது தாயார் , ஏற்கெனவே 1989ம் ஆண்டு ரோபார் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறையில் இருந்தபடியே காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் 4 லட்சத்து 72481 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவை கிட்டத்தட்ட 2 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துளளார் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டில் தேச விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத்துக்காக அவரது மகன்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தந்தையை வெற்றிபெற செய்துள்ளனர்.

சீக்கியர் பிரச்னைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்த சரப்ஜீத் சிங் கல்சாவும், போதைப்பொருள் பிரச்சனைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்த அமிர்த் பால் சிங்கும், காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்து பிரச்சாரம் செய்த ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய மூவரும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் வெற்றி அம்ரித்பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகிய இருவரையும் சிறையில் இருந்து வெளியே வர அனுமதியளிக்குமா ? என்பது இன்னும் தெரியவில்லை.

பொதுவாக , கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றால், நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் என்றும், சிறையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது உதவி ஆணையர் பொறுப்பிலான காவல்துறை அதிகாரிகள் உடன் செல்லவேண்டும் என்றும், நாடாளுமன்றஅதிகாரிகள் மற்றுமு் சக உறுப்பினர்கள் தவிர பிறரை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதால், அமிர்த் சிங் பால் மற்றும் இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் மிதவாத அரசியலை கடைபிடிப்பார்களா ? அல்லது தீவிரவாதத்தை ஆதரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி தீவிரவாதிகள் ஜனநாயக ரீதியில் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று, முன்னாள் காவல் துறை தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

Tags: Khalsason of Indira Gandhi assassinwins in Faridkot constituency
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் பாஜகவை வீழ்த்திய சாதிய வாக்குகள்!

Next Post

ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies