களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 03:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தியாகராய நகரில் முக்கிய பாலம் இடிக்கப்பட்டு, அண்ணா சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டுப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாற்று ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அதற்கென அடையாளமே மறையும் அளவிற்கு மாறி இருக்கிறது.

இதற்கு காரணம், உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதுதான்.

இதனால், வடக்கு உஸ்மான் சாலை முதல் தி.நகர் டிப்போ வரை போடப்பட்ட பாலம் மூடப்பட்டுள்ளதால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும், சாலையோர வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தி.நகரில் முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அடுத்தமுறை தி.நகருக்கு வரவேண்டாம் என தோன்றுகிறது என்றும் கூறும் பொதுமக்கள், அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான் இருக்கும் என்றால் தி நகர் வருவதையே மறந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

தி.நகர் வந்துபோக முன்பு அரை மணி நேரம் ஆன நிலையில், தற்போது இரண்டு மணி நேரம் ஆவதுடன், பெட்ரோல், டீசல் செலவும் அதிகமாகிவிட்டது. இனியும் மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளா விட்டால், தி.நகரையே மறந்துவிட வேண்டியதுதான் என வேதனை தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.

ஒரு வருடத்திற்கு பிறகு சீரான பாலம் அமையும் என்றும், போக்குவரத்தும் சீரடையும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தி.நகரில் சாலையோரத்தை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்படுகள் செய்ய தமிழக அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Traders in the weedless T. Nagar chaos!
Share
Tweet
SendShare
Previous Post

இளைஞர் மீது தாக்குதல்- காங்கிரஸ் நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைரல்!

Next Post

பள்ளி மாணவன் கண்டுபிடித்த புதிய கருவி – குவியும் பாராட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies