ராகுல் கூறிய பொய் அம்பலமான உண்மை ஆதாரம் அளித்த ராணுவம்!
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் கூறிய பொய் அம்பலமான உண்மை ஆதாரம் அளித்த ராணுவம்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீர மரணம் அடைந்த அக்னி வீரர் அஜய் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களுடன் இந்திய இராணுவம் பதிலளித்துள்ளது. இதன் மூலம் ராகுலின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இந்திய இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பாக அக்னி வீர் திட்டம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி வீர் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்ற 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் அழைக்கப்படுகிறது.

அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4. 76 லட்சம் ரூபாயில் தொடங்கி 6.92 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப் படுகிறது. பணியில் இருக்கும் போது 48 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு தரப்படுகிறது. பணி நிறைவு பெறும் போது 10.01 லட்சம் ரூபாய் தனித் தொகையாக அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பணியில் நீடிக்க விரும்பும் இளைஞர்களில் தகுதி அடிப்படையில் 25 சதவீத பேருக்கு நிரந்தரப் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசு ஊழியருக்கு பயணத்தின் போது வழங்கப் படும் கட்டண சலுகைகள், ரேஷன் வசதிகள் உட்பட அனைத்தும் சலுகைகளும் வழங்கப் படுகின்றன.

ஒருவேளை பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கூடுதல் மானிய நிதியாக 44 லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்துக்கு தரப்படுகிறது. இந்த இழப்பீடுகள் x, y, z என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

கடந்த வாரம் 18 வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் அக்னிவீர் திட்டம் குறித்த பல தவறான தகவல்களை மக்களவையில் தெரிவித்திருந்தார்.

சிறிதும் தாமதிக்காமல், ராகுல் காந்தி தவறான அறிக்கைகளை வெளியிட்டு மக்களவையை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக தெரிவித்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்யும் அக்னிவீரரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அக்னிவீர் திட்டம் தொடர்பாக மக்களவையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொன்னதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, உயிர் தியாகம் செய்த அக்னிவீரரின் தந்தை சொல்வதைக் கேளுங்கள் தனது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமாரின் தந்தையின் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலதில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஜனவரி 18 ஆம் தேதி நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 23 வயதான அஜய் குமார் என்ற அக்னி வீரர் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், அக்னிவீரர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இதுவரை 98.39 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி இருப்பதாக கடந்த புதன்கிழமை,இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் , நாட்டுக்காக உயிர் ஈந்த அக்னி வீரரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன என்றும், அக்னிவீரரின் குடும்பத்திற்கு ஏற்கனவே 98.39 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசின் காப்பீடாக 48 லட்சம் ரூபாயும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிதி நிறுவனங்களிடமிருந்து 50 லட்சம் ரூபாயும் கூடுதலாக 39,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ நல நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாயும், அவரது மீதமுள்ள பணி காலம் முடியும் வரை உள்ள ஊதிய நிலுவை தொகையாக சுமார் 13 லட்சம் ரூபாயும் , சேவா நிதி நிதியாக 2.3 லட்சம் ரூபாயும் மொத்தம் 67.3 லட்சம் ரூபாயும் உரிய அலுவலக நடைமுறைக்குப் பிறகு வழங்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்திருக்கிறது.

இதன்படி, மொத்த இழப்பீட்டுத் தொகை தோராயமாக 1 கோடியே 65 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் விளக்கம் தரப் பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் விளக்கத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அக்னிவீரர்களின் நலனுக்காக இந்திய ராணுவம் உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags: The army provided the truth that exposed Rahul's lies!
ShareTweetSendShare
Previous Post

100 கோடி கிளப்பில் இணைந்த ஹீரோக்கள்!

Next Post

வறுமை ஒழிப்பு 8.5% ஆக சரிவு 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதனை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies