வறுமை ஒழிப்பு 8.5% ஆக சரிவு 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதனை!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறுமை ஒழிப்பு 8.5% ஆக சரிவு 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதனை!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2011- 2012ம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை 8.5 சதவீதமாக குறைந்துள்ளது என்று NCERP ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

மோடி 2.0 ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப் பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இது ஒவ்வொரு ஏழைக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், NCAER என்ற அமைப்பு, சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய மனித வளர்ச்சியை கணக்கெடுத்து தந்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக NCAER தெரிவித்துள்ளது.

மேலும் டெண்டுல்கர் கமிட்டியின் மூலம் பணவீக்கம் சரி செய்யப்பட்ட வறுமைக் கோட்டை பயன்படுத்தி இந்தியாவின் வறுமைவிகிதம் மதிப்பீடு செய்யப் பட்டுளளதாக சொல்லப் பட்டிருக்கிறது. அதன் படி, 2011-2012 ஆம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை 8.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இதில், 3.2 சதவீத பேர் பிறக்கும் போதே வறுமையில் உள்ளதாகவும், 5.3 சதவீதம் பேர் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களால் வறுமையில் தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிராமப் புறங்களில் 24.8 சதவீதமாக இருந்த வறுமை, 8.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 13.4 சதவீதமாகவும் இருந்த வறுமை 8.4 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புள்ளியியல் அலுவலகம் தந்துள்ள குடும்ப நுகர்வு செலவீனங்களின் அடிப்படையில்,இந்தியாவில் வறுமை நிலை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கலாம் என்று இந்தியாவின் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால், பொது விநியோக முறையின் மூலம் அதிகமான உணவு மானியம் வழங்கப் படுவதும், பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருவதும், வறுமை விகிதம் இந்தியாவில் குறைவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் NCAER ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வரும் மத்திய அரசு, வறுமையில் இருக்கும் மக்களைப் பொருளாதாரத்தில் உயர்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது . இதன் காரணமாகவே , இந்தியாவின் வறுமை கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக கட்டமைப்பில் ஏழைகளுக்கான உரிய பாதுக்காப்பு, அவர்களுக்கான பொருளாதார வளர்ச்சி, அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்திவரும் அரசால் , இந்தியாவில் வறுமையை நிச்சயம் ஒழித்து விட முடியும் என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: Poverty alleviation has fallen to 8.5% in 10 years Prime Minister Modi's achievement!
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் கூறிய பொய் அம்பலமான உண்மை ஆதாரம் அளித்த ராணுவம்!

Next Post

உடல் எடை குறைப்பா? டிரெண்டிங் ஆகும் தண்ணீர் விரதம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies