நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!
Jun 26, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எடுத்த முடிவை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படம் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தி. நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி , துணை தலைவர்கள் பூச்சி முருகன், மற்றும் கருணாஸ் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் காணொளி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். மேலும் இக்கூட்டத்தில் செயற்குழு நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி பேசுகையில்,

திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கம் & நடிகர் சங்கம் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் நடிகர் சங்கம் சார்ந்த பிரச்சினையோ தயாரிப்பாளர் சார்ந்த பிரச்சினையோ எப்போதும் கலந்து ஆலோசித்து இரண்டு பக்கமும் குழுக்கள் அமைத்து தான் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை தன்னிச்சையாக  (யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல்) வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு புகாரும், வேலை நிறுத்தமும் முடிவெடுத்துள்ளனர். அது தொடர்பாக தலைவரிடமும் செயலாளரிடமும் வீடியோ கான்பரன்ஸில் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. ரொம்ப வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக எடுப்போம். இதுவரை பேசிய விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது. பிரச்சினையையும் தீர்த்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை.

எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வராத நிலையில், திடீரென அவர்கள் அறிக்கையை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம்.

தொடர்ந்து இனிமேல் அவர்கள் பணியாற்ற முடியாது என்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று நினைக்கிறேன்.‌ அது தவறான விஷயம் அந்த முன்னெடுப்பை எதனால் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.‌ படப்பிடிப்பை நிறுத்துவது என்பது, எத்தனையோ தொழிலாளர்கள் சார்ந்த விஷயம். அதை எப்படி அவர்களே முடிவு எடுக்க முடியும் என்பதும் சந்தேகத்திற்குரியது. இது லீகலே கிடையாது. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வேலைநிறுத்தம் முடிவை எடுக்க கூடாது. பெப்சிக்கு தெரியுமா இந்த விஷயம்? எனத் தெரிவித்தார்.

நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் பேசுகையில்,

எல்லா சங்கத்தையும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் அதுதான் மரபு. கடந்த காலங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. இந்த முறை தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் அந்த முடிவை அறிவித்ததுள்ளது.

நடிகர் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. அதே மாதிரி நடிகர்களும் பல படங்களுக்கு தேதி கொடுத்து, திடீரென அவர்களின் தொழிலை முடக்குவது என்பது நியாயமற்ற செயல். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதே போல் இதற்கான முடிவை சங்கத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Tags: The South Indian Actors' Association strongly condemned the Tamil Film Producers' Association!The South Indian Actors Association supported actor Dhanush!
ShareTweetSendShare
Previous Post

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Next Post

தலித் மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது! – வினோஜ் பி.செல்வம்

Related News

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகள் வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies