கடன் செயலி மோசடி!: சீன நிறுவனங்கள் மீது இறுகும் பிடி!
Aug 24, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடன் செயலி மோசடி!: சீன நிறுவனங்கள் மீது இறுகும் பிடி!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிதி மோசடிகள் காரணமாக அடுத்த 90 நாட்களுக்குள் 400க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை இந்திய அரசு முடக்கும் என்று தெரிய வருகிறது. மேலும், 600-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் மீதும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம், சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்ய விரும்பும் இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான புதிய வர்த்தக ஆலோசனை வெளியிட்டிருந்தது

மேலும், இந்த ஆலோசனையையும் அதன் இணைப்பு ஆவணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், சீன நிறுவனங்களுடன் கையாளும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , இந்திய நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.

சீன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதற்கு முன் தங்களை கலந்தலோசிக்குமாறு கூறியிருந்த சீனாவுக்கான இந்திய தூதரகம், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்கும் படியும் இந்திய நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. இதன் காரணமாகவே, டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான, டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.

எளிதாக கடன் வழங்கும் திட்டம் போன்ற வசீகரமான திட்டங்களால் சிக்க வைத்து, இந்திய மக்களை ஏமாற்றுவதில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும் இந்த நிறுவனங்கள், அதிகப்படியான வட்டி விகிதங்களைச் செலுத்த முடியாத மக்களைத் துன்புறுத்துவது போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திய மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட வந்த கிட்டத்தட்ட 600 சீன நிறுவனங்கள் மீதான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், டெல்லி, பெங்களூரு, உத்தரபிரதேசம், ஆந்திரா, மும்பை, சென்னை உள்ளிட்ட 17 மாநிலங்களில் செயல்பட்டு வந்த சுமார் 400 சீன நிறுவனங்களின் பதிவு மற்றும் உரிமம் அடுத்த 90 நாட்களுக்குள் செயற்பாட்டில் இருந்து நிறுத்தப் பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளையடிக்கும் கடன் நடைமுறைகளுடன், அரசின் நிதி விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபட்டு வந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவையும் இழுத்து மூடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய நிறுவனங்கள் இந்திய அரசிடம் பதிவு செய்யப்படாத நிறுவனங்களாகும். சீனாவில் இருந்து முதலீடுகள் பெற்ற ஒரு சில நிறுவனங்கள் எந்த காரணத்துக்காக அனுமதி பெற்றதோ, அதை மீறி வேறு மோசடி தொழிலையும் செய்து வருகின்றன.

இந்த மாதிரியான சில நிறுவனங்களில் இந்திய இயக்குநர் இருந்தாலும் , நிறுவனத்தின் வங்கிக் கணக்கு சீனாவிலிருந்து இயக்கப்படுகிறது என்றும் மத்திய அரசின் விசாரணையில் தெரிய வந்துள்ளன.

மொபைல் பாகங்கள் தயாரிப்பாளர்கள்,பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் மொபைல் ஸ்கிரீன் தயாரிப்பாளர்கள் போன்ற மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் உட்பட மேலும் 40 சீன நிறுவனங்கள் மீது விசாரணைக்கு மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி போன்ற துறைகளில் சீன நிறுவனங்களுடன் கையாள்வதில் இருக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

நிதி மோசடியில் ஈடுபடும் சீன நிறுவனங்கள் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்திய தேசிய எல்லைகளுக்குள் செயல்படும் அயல் நாட்டு நிறுவனங்கள் மீது மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: Credit processor fraud!: A tight grip on Chinese companies!
Share
Tweet
SendShare
Previous Post

புதிய திட்டம்…புதிய கார்! : மீண்டும் இந்தியாவில் கால் பதிக்கும் ஃபோர்டு!

Next Post

கருப்பின சர்ச்சையால் திருப்பம்! : அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை முந்தும் கமலா ஹாரிஸ்!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies