மேற்கு வங்கத்தில் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கனிமொழி இதுவரை ஒரு கருத்து கூட பதிவிடாதது ஏன்? - குஷ்பு கேள்வி?
Sep 10, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 மேற்கு வங்கத்தில் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கனிமொழி இதுவரை ஒரு கருத்து கூட பதிவிடாதது ஏன்? – குஷ்பு கேள்வி?

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ள விகாரத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் மற்றும் பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன்,

இந்த சம்பவம் நாட்டையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது வரை மம்தா பானர்ஜி இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு முதல்வர், மேற்கு வங்க முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் மூத்த உறுப்பினராக உள்ளார் எனவே இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, நிச்சயம் பேச வேண்டும், இதுவே ஜனநாயக கடமையாகும் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர்,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த பாலியல் படுகொலை சம்பவத்தை வைத்து பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என தோன்றுகிறது. மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரே பெண் முதல்வராக இருக்கிறார், மகளிர்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர் செய்து கொடுப்பார், மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் பிரச்னைகள் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார்.

ஒரு தாய் ஸ்தானதில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை, இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஒரு பெண் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய பட்டு இருக்கிறார், நிர்பயாவுக்கு பிறகு இதுபோன்ற ஒரு விஷயத்தை பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜிக்கு எப்படி தூக்கம் வருகிறது என எனக்கு தெரியவில்லை.

அந்த பெண் இறந்ததன் பிறகு அந்த கல்லூரியின் சூப்பிரண்டு பெண்ணின் பெற்றருக்கு அழைத்து உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார், அதன் பிறகு இரண்டாவது முறையாக அழைத்து உங்கள் பெண் தற்கொலை செய்துவிட்டார் என சொல்லி இருக்கிறார். மேலும் பெற்றோரிடம் மருத்துவனையில் 3 மணி நேரம் கழித்தே அந்த பெண்ணின் உடலை கொடுத்துள்ளனர்.

பயங்கரமான கொடுமை செய்து, உடலை வருத்தி, கடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். நாய் கடித்தால் கூட அவரது உடலில் உள்ள காயம் போல இருக்காது.

அந்த பெண்ணின் உடலில் 150 கிராம் விந்து இருந்ததாக உடர்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கிறது. இது ஒருவரால் அரங்கேறி இருப்பது கிடையாது, இது கூட்டுப்பாலியல் வன்கொடுமையாக தான் இருக்கும்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் பிரச்னை வைத்து பார்க்கும் போது, மம்தா பானர்ஜி முதல்வராக தொடர வேண்டுமா? அதற்கான தகுதி இருக்கிறதா என்று தான் நான் கேட்பேன். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

நேற்று 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் போது, நேற்றைய முன்தினம் மேற்கு வங்கத்தில் 5000 பேர் ஒருங்கிணைந்து உள்ளனர். அங்குள்ள 18 அறைகளை உடைத்து, இருக்கின்ற அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் உடைத்து மோசம் செய்துவிட்டனர். ஆனால் காவல்துறை இதனை தடுக்கவில்லை… மம்தா பானர்ஜி தங்களுக்கு பிரச்னை வந்துவிடும் என இவ்வளவு பேரை ஏவி விட்டுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி ஒரு டுவீட் கூட போடவில்லை, முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உறங்க நேரம் இருக்கிறது என பேசாமல் இருக்கிறாரா? சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு தான் கவரப் பண்ணுகிறார்கள்.

தைரியம் இருந்தால் மம்தா ஆட்சியில் தவறு நடக்கிறது என ராகுல் காந்தி கேள்வி கேட்க ஏன் அஞ்சுகிறார்? பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்? திரிணாமுல் காங்கிரஸ் -க்கு எதிராக போய் தெருவில் உட்கார வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதே போல உத்தரகாண்டில் இன்று வெளியான செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த செய்திப் படி அந்த மாநில முதல்வரும் பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் எவ்வளவு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது? இங்கே முதல்வர் ராஜினாமா செய்துவிட்டாரா? எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், அவர்களே சட்டம் சீர்குலைவுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: Why hasn't Kanimozhi posted a single comment on the issue of student brutality in West Bengal? - Khushbu question?
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி- முகமது யூனுஸ் பேச்சு!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டமாக பேரவைத் தேர்தல்!

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies