எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை - பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்
Aug 7, 2026, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் பயந்தது அதிமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டவர்களும் அதிமுகவினர்தான் என்றும்,
அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பொழுதுபோக்கு எனவும் கரு.நாகராஜன் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுக நான்காக சிதறியுள்ள நிலையில், தலைவர்கள் இல்லாமல் தொண்டர்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்று கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை எனவும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து வசைபாடி வருவதன் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இயலாமையை வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4வது இடத்தை பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
அதிமுகவின் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம் என கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அதிமுக, மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக் கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவு இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க கூடாது எனக்கூறியுள்ள கரு.நாகராஜன்,அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் கரு. நாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiKaru.NagarajanepsTamil Nadu BJP Vice President
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies