அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!
Aug 31, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 11:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு  தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று. நாட்டை கட்டியமைக்கும் பணியில் மைல்கல்லாக திகழ்ந்து வரும் சென்னைப் பல்கலைக்கழகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்டது தான் இந்த சென்னைப் பல்கலைக்கழகம். ஏராளமான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என பல வல்லுநர்களை அடையாளம் காட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று..

துறைரீதியான படிப்புகளுக்கு தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் தற்போது இருக்கும் நிலையில், முன்பு மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்று மட்டுமே திகழ்ந்தது.

தமிழகத்தில் பல்கலைக்கழகம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது சென்னைப் பல்கலைக்கழகம் தான் என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் அதன் முன்னாள் மாணவரும, இந்நாள் பேராசிரியருமான ஜெய் சக்திவேல்.

டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.ஆர்.நாராயணன் உட்பட ஆறு குடியரசுத் தலைவர்கள், நோல்பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.சுப்பாராவ், என எண்ணற்ற அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும் உருவாக்கிய பெருமையை கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்றளவும் தரமான கல்வி கிடைப்பதாக கூறுகிறார் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் தீப்தி

121 இணைப்புக் கல்லூரிகள், சேப்பாக்கம், கிண்டி, மெரினா, தரமணி, சேத்துப்பட்டு என் ஐந்து வளாகங்கள், 32 துறைகள் என நூற்றாண்டுகளை கடந்தும் சென்னைப் பல்கலைக்கழகம் தனித்துவமிக்கதாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகம், புத்தக விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களின் அறிவுசார் தேடல்களுக்கும் துணையாக இருக்கிறது.

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம், எதிர்கால இளைய சமுதாயத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறது.

 

Tags: CHENNAI UNIVERSITYChennai Provincemadras university
Share
Tweet
SendShare
Previous Post

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் – பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies