அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!
Aug 3, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு  தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று. நாட்டை கட்டியமைக்கும் பணியில் மைல்கல்லாக திகழ்ந்து வரும் சென்னைப் பல்கலைக்கழகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்டது தான் இந்த சென்னைப் பல்கலைக்கழகம். ஏராளமான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என பல வல்லுநர்களை அடையாளம் காட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று..

துறைரீதியான படிப்புகளுக்கு தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் தற்போது இருக்கும் நிலையில், முன்பு மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்று மட்டுமே திகழ்ந்தது.

தமிழகத்தில் பல்கலைக்கழகம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது சென்னைப் பல்கலைக்கழகம் தான் என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் அதன் முன்னாள் மாணவரும, இந்நாள் பேராசிரியருமான ஜெய் சக்திவேல்.

டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.ஆர்.நாராயணன் உட்பட ஆறு குடியரசுத் தலைவர்கள், நோல்பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.சுப்பாராவ், என எண்ணற்ற அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும் உருவாக்கிய பெருமையை கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்றளவும் தரமான கல்வி கிடைப்பதாக கூறுகிறார் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் தீப்தி

121 இணைப்புக் கல்லூரிகள், சேப்பாக்கம், கிண்டி, மெரினா, தரமணி, சேத்துப்பட்டு என் ஐந்து வளாகங்கள், 32 துறைகள் என நூற்றாண்டுகளை கடந்தும் சென்னைப் பல்கலைக்கழகம் தனித்துவமிக்கதாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகம், புத்தக விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களின் அறிவுசார் தேடல்களுக்கும் துணையாக இருக்கிறது.

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம், எதிர்கால இளைய சமுதாயத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறது.

 

Tags: CHENNAI UNIVERSITYChennai Provincemadras university
ShareTweetSendShare
Previous Post

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் – பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி!

Related News

இன்றைய தங்கம் விலை!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies