சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!
Jul 29, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகராட்சி பள்ளிகளில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தற்காப்புக் கலைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை செயல்படுத்தி காட்டியிருக்கிறது சென்னை மாநகராட்சி.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் 6 மாத கால சிறப்பு வகுப்பு சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கராத்தே, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு கலைகளை பெண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில், முதற்கட்டமாக 6 பள்ளிகளில் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பின் மூலம், கராத்தேவின் மூலம் தடைகளை தகர்த்தெறிவது, எதிரிகளை தாக்குவது, எதிர்வரும் தாக்குதலை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

மனதில் பெரும் தடையாக இருக்கும், பயம், கோபம், சோம்பேறித்தனம், தலைக்கனம், சோகம் மற்றும் சந்தேக குணம் ஆகியவைகளை தகர்த்தெறியும் பொருட்டு, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி ஓடுகளை கைகளாலும், கால்களாலும் உடைத்து மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

செல்லும் இடமெல்லாம் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டி எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செயலை மையமாக கொண்டு கற்பிக்கப்பட்டு வரும் இந்த தற்காப்பு கலைகள் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தேவையான ஆயுதம் என்கின்றனர் பயிற்சியாளர்கள்

இனி விளம்பரங்களில் ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை தாண்டி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Chennai Municipal Corporationgirl childrenmunicipal schools.martial arts
ShareTweetSendShare
Previous Post

அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Next Post

சிப் உற்பத்தியில் முதலிடம் – இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies