வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?
Apr 29, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்னையின் பிரபல ரவுடியாக மாறியது எப்படி ? என்கவுண்டர் நடைபெற்றது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் நீ என்னவாக போகிறாய்? என ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு நான் மருத்துவராக போகிறேன், எஞ்சினியராகப் போகிறேன், கலெக்டராக போகிறேன் என சொல்லி கேள்விபட்டிருப்போம்.

ஆனால் தம்முடைய உறவினர் துரையைப் போலவே தாமும் ரவுடியாவேன் எனக்கூறியவர் தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி. மாணவ பருவத்திலேயே அடி, தடி, வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஆறு கொலை வழக்குகள், 17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உட்பட மொத்தமாக 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடிக்கடி சிறைக்கு சென்றுவந்த பாலாஜிக்கு காக்காதோப்பு பகுதி ரவுடிகள் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோரின் நட்பு கிடைத்தது. மூவரும் இணைந்து மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்தனர். பின்னாளில் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் உருவானது. தனக்கு எதிராக இருந்த யுவராஜை கொலை செய்த பாலாஜி, காக்காதோப்பு பாலாஜியாக உருவெடுத்தார்.

வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தடையாக இருந்த அனைவரையும் காக்க தோப்பு பாலாஜி தீர்த்து கட்டினார். வடசென்னை ரவுடி சாம்ராஜ்யத்தில் கொடிகட்ட பறந்த பாலாஜியின் எல்லை விரிவடையத் தொடங்கியது. செம்மரக் கடத்தல் தொடர்பில் இருந்தவர்களுடன் நெருக்கம் காட்டி அந்த தொழிலும் ஈடுபடத் தொடங்கினார் காக்கா தோப்பு பாலாஜி.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளை காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில், தலைமறைவானார் காக்காதோப்பு பாலாஜி

இதற்கிடையில் சென்னை அண்ணா சாலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜியும், அவரது நெருங்கிய நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்த போது ரவுடி சம்போ செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டை வீசியதில் காக்கா தோப்பு பாலாஜி நூலிழையில் உயிர் தப்பினார். அதன் பின் போலீசார் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையிலிருந்து திரும்பிய பின் ஆந்திர எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்து வழக்கம் போல ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து தொழில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் காக்கா தோப்பு பாலாஜி இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினருக்கும், ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

Tags: Chennairowdy Kaka Thoppu BalajiKaka Thoppu Balaji encounterBroadway
ShareTweetSendShare
Previous Post

சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகார் – சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்!

Next Post

வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies