கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது - வானதி சீனிவாசன்
Jun 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது – வானதி சீனிவாசன்

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி, கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாராய உயிரிழப்பு குறித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது.

உயர்நீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.
ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பிரச்சனையை எடுத்துச் சென்றார்கள்.

அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடி இன்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கு, கள்ள சாராய உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் தமிழக அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிகிறது.*உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

சிபிசிஐடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசின் மிகப்பெரிய தோல்வி.மாநில அரசு ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கிறது .இன்னொரு பக்கம் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை.

ஆளுங்கட்சியின் ஆதரவின் காரணமாக பதுங்கியுள்ள காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் நபர்கள் சிபிஐ விசாரணையின் மூலம் வெளி வருவார்கள். சிபிஐ விசாரணையில் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 

Tags: chennai high courtVanathi SrinivasanKallakurichi issue
ShareTweetSendShare
Previous Post

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

Next Post

தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies