தஞ்சையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
Jun 5, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 21, 2024, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரும் கடந்த 1 அரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இவர்களின் காதலை ஏற்க ரமணியின் பெற்றோர் மறுத்ததால், மதன்குமார் உடனான காதலை ரமணி கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஓய்வறையில் இருந்த ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் ஆசிரியை ரமணியின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் கோவை செழியனை சூழ்ந்த அவர்கள், உடற்கூராய்வு முடிந்தவுடன் உடனடியாக உடலை பெற்றுச்செல்லுமாறு காவல்துறையினர் தங்களை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் கோவை செழியன், இந்த சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியை ரமணியின் உடலுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆசிரியை ரமணியின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான மல்லிப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டது.

Tags: teacher killedChinnamanai areatanjoreRamaniteacher stabbedMallipattinam Government High SchoolMadankumar arrest
ShareTweetSendShare
Previous Post

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies