உஷார் மக்களே.... இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உஷார் மக்களே…. இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அளவில் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் மொபைல் மால்வேர் தாக்குதல்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காரணம் என்ன? மொபைல் மால்வேர் தாக்குதல்கள் இந்தியாவில் அதிகமாக நடப்பது ஏன்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சைபர் குற்றங்கள் நடக்கும் விதத்தை மாற்றியமைத்துள்ளது. இதனால், மொபைல் மால்வேர் மற்றும் ஃபிஷிங் அச்சுறுத்தல்அதிகரித்து வருகின்றன.

உலகளாவிய கிளவுட் செக்யூரிட்டி முன்னணி நிறுவனமான Zscaler ThreatLabz , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையிலான 2000 கோடிக்கும் அதிகமான அச்சுறுத்தல் தொடர்பான மொபைல் பரிவர்த்தனைகள் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் அடங்கிய தரவுகளை ஆய்வு செய்துள்ளது.

ஆய்வின் முடிவுகளை, Mobile, IoT மற்றும் OT Threat Report என்னும் தலைப்பில் அறிக்கையாக சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய மொபைல் மால்வேர் தாக்குதல்களில் 28 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 27.3 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும்,15.9 சதவீதத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத் தக்கது.

ஏற்கெனவே, இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொபைல் மால்வேர் மூலமாக 452 கோடி ரூபாய் திருடப்பட்டதாகவும், தலைநகர் டெல்லியில் மட்டும் இந்த வகையான மோசடிகள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகள் சுமார் 158 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இன்னொரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

HDFC, ICICI மற்றும் Axis வங்கிகள் போன்ற இந்திய வங்கிகளின் மொபைல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த ஃபிஷிங் மோசடிகள் அதிகரித்துள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு, இத்தகைய சைபர் குற்றவாளிகள் அசல் போல் இருக்கும் போலி வங்கி இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதிர்ச்சி தரும் வகையில், இந்திய தபால் துறையும் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளது. எஸ்எம்எஸ் செய்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ஃபிஷிங் இணைய தளங்களுக்கு தள்ளப்படுவதாகவும், அந்த தளங்களில் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட சொல்வதாகவும், அதன் பிறகே மோசடிகள் நடப்பதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சர்வதேச அளவில், கூகுள் ப்ளே ஸ்டோரில் 200க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் செயலிகள் உள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த செயலிகள் மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. கூடுதலாக மால்வேர் பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மொபைல் மால்வேர் தாக்குதல்களில் இந்தியா ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், சைபர் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளது. சிறந்த இணையப் பாதுகாப்பு நடைமுறைகளும் மற்றும் மக்கள் விழிப்புணர்வும் இந்தியாவின் முன்னேற்றத்துக்குக் காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மொபைல் மால்வேர், ஃபிஷிங் சவால்களை எதிர்கொள்வதில் வலுவான சட்டத்தின் அவசரத் தேவையையும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: epicenter of mobile malware attackscybercrimeZscaler ThreatLabzIndiaAImobile malware attacksAsia-Pacific region
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருட்டு – 3 பேர் கைது!

Next Post

சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி : காலிஸ்தான் பயங்கரவாதி கைது – சிறப்பு தொகுப்பு!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies