ராஜாதி ராஜா குகேஷ் : சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் - சிறப்பு தொகுப்பு!
Jun 24, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜாதி ராஜா குகேஷ் : சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி, உலக கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ள ராஜாதி ராஜா குகேஷ் குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்..

சதுரங்க உலகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் எப்போதும் தனித்துவமிக்கதாகவே திகழ்கிறார்கள். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, தமிழகத்தில் இன்னொரு விஸ்வநாதன் ஆனந்த் உருவாக குறைந்தது 30 வருடங்களாவது தேவைப்படும் என எண்ணிய நிலையில், தற்போதைய இளம் வீரர்கள் அடுத்தடுத்த பிளாக் பஸ்டர்கள் வெற்றிகளின் மூலம் சரித்திரமிக்க சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்தியாவின் இளம் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று செஸ் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுத்துள்ளார். உலக நடப்புச் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரென் உடன் மோதிய குகேஷ் இறுதிச்சுற்று வரை போராடி உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தனது 17 ஆவது வயதிலேயே உலகின் டாப் 10 வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறிய குகேஷ், உலக செஸ் அரங்கில் டாப் 10 இடத்துக்கு முன்னேறும் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வரும் குகேஷ், குறைந்த வயதிலேயே இத்தகைய சாதனைகளை படைத்ததற்கு பின்னால் பெரும் போராட்டமே அடங்கியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு தனது 9 வயதில், ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப், 12 வது வயதில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், ஆசிய யூத் சாம்பியன்ஷிப், டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், தனிநபர் கிளாசிக் என அவர் வென்ற பட்டங்களை பட்டியலிடவே நீண்ட நேரங்கள் செலவிட வேண்டியிருக்கும்.

12 வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த குகேஷ், 2021 இல் ஜூலியஸ் பேர், கெல்பாண்ட் சேலஞ்ச் உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளார். நடப்பாண்டு ஹங்கேரியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியில் விளையாடி, தங்க மகனாகவும் ஜொலிக்கத் தொடங்கினார் குகேஷ்

ஏம் செஸ் Rapid முறை போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, இளம் வயதிலேயே கார்ல்சனை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். அடுத்தடுத்து 2023 இல் பிடே ரேட்டிங் புள்ளிகளில் 2750 மதிப்பீட்டை பெற்ற இளம் வீரர் மற்றும் உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்ற இளம் வீரர் உள்ளிட்ட சாதனைகளை அடுக்கடுக்காக தனது 17 வது வயதிலேயே அசாத்தியமாக புரிந்தவர் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்.

சதுரங்க உலகில் ஒருபுறம் பிரக்ஞானந்தா, மறு புறம் குகேஷ் என இருந்தாலும், இருவரும் தமிழ்நாட்டு வீரர்களே ஆவர். ஆனால் உலக செஸ் அரங்கில் இருவரும் மின்னல் முரளிகள் என்றே சொல்லலாம்.

பிரக்ஞானந்தா கடந்த உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்று உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றார். ஆனால் குகேஷ் காலிறுதியில் மேக்னஸ் கார்ல்சன் இடம் தோல்வியுற்று, உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கன வாய்ப்பை நழுவ விட்டாலும், தனது தொடர் முயற்சியால் அடுத்தடுத்து சர்வதேச செஸ் தொடர்களில் கில்லியாக விளையாடி உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.

கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி என மூன்று தமிழ்நாடு போட்டியாளர்கள் களம் கண்ட நிலையில், குகேஷ் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி ஒரு சுற்றில் மட்டுமே தோல்வி அடைந்து 9 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்தார். 14 சுற்றுகள் முடிவில் முதல் இடத்தில் இருந்த குகேஷ் உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

பொதுவாகவே உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற போட்டியாளர், நடப்பு உலக சாம்பியன் உடன் புதிய உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுவார். அதன்படி குகேஷ் உலக சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடன் களம் கண்டார்.

செஸ் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் குகேஷ் பக்கம் தான் திரும்பியது. தனக்கு 11 வயது இருக்கும் பொழுது குகேஷ் இடம் ஒரு நிருபர், உங்களின் இலக்கு என்ன என கேட்ட போது, தான் இளம் வயதிலேயே உலக சாம்பியன் ஆக வேண்டும் என அவர் சொல்லியிருப்பார். இப்போது சொன்னதை தனது இளம் வயதிலேயே சாதித்துக் காட்டியுள்ளார் இந்த குகேஷ் தொம்மராஜு…

Tags: Ding LirenTamil NaduViswanathan AnandGrandmaster Kukeshchess world champion
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்

Next Post

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! – ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies