முடங்கும் அமெரிக்கா : லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் அமெரிக்கா : லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தின் காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்றம் நிராகரிக்கும் நிலையில், அனைத்து அரசாங்க சேவைகளும் நிறுத்தப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 8, 75,000 அமெரிக்க கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் அரசாங்கம் கூட்டாட்சி முறை அரசாங்கமாகும். நிதியாண்டின் தொடக்கமான அக்டோபர் 1ம் தேதிக்கு முன் 438 வெவ்வேறு அரசு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொதுவாக அடுத்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கப்படும் வரை, அனைத்து அரசு துறைகளிலும் அத்தியாவசியமல்லாத செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படும். அந்த சமயத்தில் தான் அமெரிக்க அரசாங்கத்தில் மிக பெரிய அளவில் பணி நிறுத்தம் ஏற்படுகிறது.

வழக்கமாக, அரசு துறைகளில் வேலை நிறுத்தங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் SPENDING BILL அல்லது STOP GAP என்று தற்காலிக நிதியுதவி மசோதாவை நிறைவேற்றுவார்கள்.

இந்த ஆண்டுக்கான தற்காலிக மசோதா, சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது. ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும், காலக் கெடுவை வரும் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கும் தற்காலிக மசோதாவை கொண்டு வந்தனர்.

குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை மற்றும் ஜனநாயக கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபை இரண்டிலும் இந்த தற்காலிக நிதி உதவி மசோதா நிறைவேறினால் மட்டுமே அமெரிக்க அரசில் பணிநிறுத்தம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஆனாலும், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மசோதா நிறைவேறவில்லை.

தேவையில்லாத செலவின கணக்குகள் திணிக்கப்பட்டதாகக் கூறிய குடியரசு கட்சியினர், பிரதிநிதிகள் சபையில் நிதி மசோதாவை நிராகரித்தனர். இந்த அரசாங்க பணி நிறுத்தத்தால், அமெரிக்க அரசு ஸ்தம்பிக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 875,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய பாதுகாப்பு ,கண்காணிப்பு ஊழியர்கள் பணியில் இல்லாமல் போகலாம்.

அமெரிக்க ராணுவத் துறையிலும் இந்த பணி நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பென்டகனில், கிட்டத்தட்ட சுமார் 8,00,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய சமூகப் பாதுகாப்பு அட்டை பெறுவது தாமதமாகலாம் என்றும், நாடு முழுவதும் சிறு விவசாயிகளுக்கான புதிய கடன்கள் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பூங்காக்கள், நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு சுற்றுலா இடங்களும் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. பணிநிறுத்தம் பணத்தை மிச்சப்படுத்தும் என்று தோன்றலாம். உண்மையில், பணிநிறுத்தத்தால் அதிகமான பணம் செலவாகும் என்று தரவுகள் காட்டுகின்றன.

இந்த வேலை நிறுத்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை. 2018-2019 ஆண்டின் பணி நிறுத்தத்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 11 பில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக குறைந்தது.

1977ம் ஆண்டு முதல் 22 முறை இந்த மாதிரியான வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான பணிநிறுத்தங்கள் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். 2018 ஆம் ஆண்டு மட்டும் இந்த பணிநிறுத்தம் தொடர்ந்து 35 நாட்களாக நீடித்தது.

ட்ரம்ப் பதவி ஏற்கும் வரை அரசு நடவடிக்கைகளை எலான் மஸ்க் தாமதப்படுத்துவதாக ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பதற்றமான அரசியல் சூழலில், எலான் மஸ்க் அரசு நிர்வாகத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், குடியரசுக் கட்சியினர் அரசு நிர்வாகத்தில் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும், அரசு பணிநிறுத்தம் அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் முன் மொழிவு, அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான நடவடிக்கை யாகும் என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ரோ கன்னா தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே,படிப்படியாக அதிகரித்து வரும் அமெரிக்க அரசின் கடன் தற்போது 36 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. ஒரு கட்டத்தில் அரசு கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: federal governmentSTOP GAP.RepublicansSenateDemocratsUS President Trumpspending billspending bill reject
Share
Tweet
SendShare
Previous Post

அரபு நாடுகளிலும் ஆதிக்கம்! : போட்டு தாக்கும் மோடி குவைத்தில் சாதித்து என்ன?

Next Post

ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies