கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.
இந்த “சப்தரிஷி ஆரத்தி”, சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை எனக் கூறப்படுகிறது. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப நாளை முன்னிட்டு ஈஷாவில் விமர்சையாக நடைபெற்றது.