காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 19, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலினின்  இரும்புக்கரம் நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது!

Murugesan M by Murugesan M
Feb 3, 2025, 05:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறை பணி நியமன முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தனது அலுவலகம் எரிக்கப்பட்டதாக ஏடிஜிபி கல்பனா நாயக், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதினார்.

இதை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,

விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?

காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலினின்  இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அண்ணாமலை  விமர்சித்துள்ளார்.

Tags: DMKMK Stalintn govermentEven top police officers are not safe in Tamil Nadu: Annamalai allegation!Additional DGP Kalpana Naik
Share
Tweet
SendShare
Previous Post

திருவாரூர் : என்.ஐ.ஏ. சோதனை – இருவர் கைது!

Next Post

டிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மையில்லை : சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

Related News

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies