போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி இளைஞர் தற்கொலை : உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
Jun 14, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி இளைஞர் தற்கொலை : உறவினர்கள் திடீர் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் இளைஞரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் அருகேயுள்ள ராமனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன், இளம் பெண் ஒருவருடன் தருமபுரியில் உள்ள லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை லாட்ஜ் உரிமையாளர் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவருக்கு புகழேந்தி 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து புகழேந்தியை தருமபுரி நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த சில போலீசாரும், இதே காரணத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்து டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தும் போலீசார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் மனமுடைந்த புகழேந்தி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், புகழேந்தியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரி – ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Youth commits suicide alleging that the police demanded money and threatened them: Relatives suddenly blocked the road!
ShareTweetSendShare
Previous Post

புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு!

Next Post

டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக மெக்ஸிகோ நாட்டினர் ஆர்ப்பாட்டம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies