எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jul 6, 2025, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக மாதவரம், எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு பால் விநியோகம் செய்யும் பொருட்டு மாதவரம் பால் பண்ணை அருகே, கடந்த 1959-ம் ஆண்டு மாட்டு கொட்டகை அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அருகே மாடு வளர்ப்போர் தங்கி கொள்ள எம்.எம்.காலனி என்ற பெயரில் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டது.

அண்மையில் மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக எம்.எம்.காலனி குடியிருப்பு வாசிகளுக்கு, உரிய இழப்பீடுகளை வழங்கி நிலத்தை காலி செய்து கொடுக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவின் நிறுவனத்திற்கு மனுதாரர்கள் யாரும் பால் வழங்குவதில்லை என்றும்,  மனுதாரர்கள் ஏற்கனவே நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுவிட்டதால் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் வாதிட்டார்.

வாதத்தை கேட்ட நீதிபதி பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்துவிட்டதாகவும், அதற்கான போக்குவரத்தும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்ட பின் காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து மே 31-ம் தேதிக்குள் குடியிருப்பு வாசிகள் அனைவரும் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை காலி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.

Tags: MM Colony should be vacated within 4 months : Madras High Court High Court Order!Madras High Court High Court Order
ShareTweetSendShare
Previous Post

அங்கன்வாடியில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க சிறுவன் கோரிக்கை!

Next Post

கள்ளக்குறிச்சி : பெண் விஏஓ மீது தாக்குதல் – சாணம் வீச்சு: போலீசார் விசாரணை!

Related News

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies