அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!
Sep 12, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 02:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுயுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருப்பதாகவும், சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாமல் இருக்கும் இடத்தில் 32 கிலோ மீட்டர்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 29,187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும், 57 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.

இச்சட்டம் 1962ல் வந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாகவும், இன்று இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளாதாக கூறினார். ஆட்சி அமைந்த பிறகு, 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 6,29,000 பேருக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், தனிமனிதனுக்கு குடியிருக்க வீடோ, இடமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சர் செயல் பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Cabinet.Patta for residents of no-objection notified by the government: Cabinet approval!
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானல் : பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் தைவான் செர்ரி மலர்கள்!

Next Post

ஜம்மு- காஷ்மீர் : அடர்ந்த பனிக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies