அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!
Jun 14, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுயுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருப்பதாகவும், சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாமல் இருக்கும் இடத்தில் 32 கிலோ மீட்டர்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 29,187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும், 57 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.

இச்சட்டம் 1962ல் வந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாகவும், இன்று இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளாதாக கூறினார். ஆட்சி அமைந்த பிறகு, 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 6,29,000 பேருக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், தனிமனிதனுக்கு குடியிருக்க வீடோ, இடமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சர் செயல் பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Cabinet.Patta for residents of no-objection notified by the government: Cabinet approval!
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் தைவான் செர்ரி மலர்கள்!

Next Post

ஜம்மு- காஷ்மீர் : அடர்ந்த பனிக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies