புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் - மோகன் பகவத் அழைப்பு!
Sep 12, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்தது. கேசவ் குஞ்ச் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் 12 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகமானது ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த அலுவலகத்தில் காணப்படும் பிரம்மாண்டம், சங்கத்தின் பணியின் மகத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். நாம் தொடர்ந்து, திசை மாறாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் சங்கப் பணிகள் வேகம் பெற்று விரிவடைந்து வருகின்றன. இன்று, இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் பிரமாண்டத்தைப் போலவே சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும். நமது பணி அதைப் பிரதிபலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தப் பணி உலகம் முழுவதையும் சென்றடையும் என்றும், இந்தியாவை விஸ்வ குருவாக (உலகத் தலைவராக) மாற்றும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.  சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான பணிகளை  தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, இணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் அலோக் குமார் மற்றும் பிற மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: mohan bhagwat speechRss newsRSS new officeSangh workersKeshav Kunjrss new headquartersRSSPraveshotsavRSS Officerss headquarters opendelhirss delhi officeSangh ideologyrss office inaugurationRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது – சீமான் உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies