ஆண்டுக்கு 2 லட்சம் கழுதைகள் இறக்குமதி : பாகிஸ்தானுடன் கழுதை ஒப்பந்தம்!
Jun 22, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆண்டுக்கு 2 லட்சம் கழுதைகள் இறக்குமதி : பாகிஸ்தானுடன் கழுதை ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுக்கு இரண்டு லட்சம் கழுதைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை சீனா இறக்குமதி செய்வதற்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

உலகத்தின் கழுதைகள் அதிகம் வாழும் மூன்றாவது பெரிய நாடு பாகிஸ்தான் ஆகும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் கழுதைகள் நுகர்வுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, அந்நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 5 கோடிக்கும் அதிகமான கழுதைகள் பாகிஸ்தானில் உள்ளன.

இந்நிலையில், ஆண்டு தோறும் இரண்டு லட்சம் கழுதைகளைப் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தந்ததின் படி, கழுதை இறைச்சி மற்றும் தோல்களைப் பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்குகிறது.

சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்து வரும் கழுதையின் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தக் கழுதை ஏற்றமதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, கழுதையின் தோலில் இருந்து எஜியோவோ என்னும் ஜெலட்டின் தயாரிக்கப்படுகிறது. இது, சீன பாரம்பரிய மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்துகளின் மூலப் பொருளாகும்.

இந்த எஜியோவோ என்பது, இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கும், தோல் நோய்களைக் குணப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கழுதைத் தோலில் உள்ள பெறப்படும் எஜியாவோவின் சந்தை மதிப்பு ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இதன் காரணமாக, ஆண்டுதோறும், 4 கோடிக்கும் அதிகமான கழுதை தோல்கள் சீனாவுக்குத் தேவைப்படுகிறது. மருத்துவத் தேவைக்கு ஏற்ப கழுதைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் குறைந்து வருகிறது.

மருத்துவப் பயன்பாட்டையும் தாண்டி, சீனாவில் , கழுதை இறைச்சி,பெரும்பாலான சீனர்களின் விருப்பமான உணவாகும். குறிப்பாக, சீனாவின் ஹேபெய் மாகாணத்தில், கழுதை இறைச்சி பர்கர், பிரபலமான சாலையோர உணவாகும். இந்த வகையிலும்,சீனாவில்,கழுதை இறைச்சியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கழுதைத் தோல்களுக்காக மற்ற ஆப்பிரிக்க நாடுகளைத் தான் முதலில் சீனா நம்பியிருந்தது. ஆனால் ஆப்பிரிக்க ஒன்றியம் கழுதைத் தோல்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. எனவே, இப்போது சீனா, பாகிஸ்தானில் இருந்து, கழுதை தோல்கள் மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், சீனாவுக்கான முக்கிய கழுதை ஏற்றுமதியாளராக பாகிஸ்தான் மாறியுள்ளது. இந்த கழுதை ஒப்பந்தத்தின் மூலம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை சீனாவுடன் பாகிஸ்தான் செய்யும்.

ஏற்கெனவே, பாகிஸ்தானில் இருந்து செம்பு,பருத்தி, பல்வேறு வகையான தாதுக்கள், மீன் மற்றும் தோல் உள்ளிட்ட பல பொருட்களை சீனா இறக்குமதி செய்து வருகிறது. அந்த வரிசையில், இந்த கழுதை ஒப்பந்தம் சீன-பாகிஸ்தான் இடையேயான ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தமாகும்.

அரசியல் குழப்பம், மற்றும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஒரு நிவாரணமாக அமையும் என்றும் பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கராச்சி துறைமுகத்துக்கு அருகில் புதிய கழுதை இறைச்சி கூடங்களை கட்டுவதற்கும் சீனா, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், இதற்காக, குவாதர் துறைமுகம் அருகில், புதிய கழுதை இறைச்சி கூடங்களைப் பாகிஸ்தான் கட்டி வருகிறது. இதன் மதிப்பு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலராகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற போக்குவரத்து முறையாகக் கருதப்படும் கழுதைகளைக் கொல்வதற்கு குவாதரில் உள்ள மதத் தலைவர்கள் உட்பட குவாதர் நகர மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாத்தில் கழுதை இறைச்சி கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய உணவுச் சட்டங்களின் படி, பாகிஸ்தானில் கழுதை இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கழுதை இறைச்சி, ஏற்றுமதி மட்டுமே செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது என்றாலும், சீனாவுடனான கழுதை ஒப்பந்தத்துக்கு, கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.

எஜியாவோ உள்ளிட்ட கழுதையிலிருந்து பெறும் பொருட்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 5.9 மில்லியன் கழுதைகள் கொல்லப்படுகின்றன. மேலும், கழுதைகள் கடத்தலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படியே போனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து உலகில் கழுதை இனங்கள் அழிந்து போகும் வாய்ப்ப்புள்ளதாகவும் சுற்றுசூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: chinaபாகிஸ்தான்Import of 2 lakh donkeys per year: donkey deal with Pakistan!2 லட்சம் கழுதைகள்
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு : ஐ.நா வாக்கெடுப்பில் திருப்பம்!

Next Post

மறக்க முடியாத மகா கும்பமேளா : பிரயாக்ராஜ் AIRPORT பிரம்மிக்கதக்க சாதனை!

Related News

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies