தொடரும் தங்கக் கடத்தல் : வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
Sep 13, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொடரும் தங்கக் கடத்தல் : வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 04:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கத்துடன் பிரபல கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தங்கத்தை ரன்யா ராவ் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கத்தை இந்தியர்கள் கொண்டு வர முடியும்? அதற்கான விதிமுறைகள் என்ன ? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தங்கம் என்றாலே இந்தியர்களுக்கு ஒரு தனி ஆசை உண்டு. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கம் ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் இந்தியர்களால் கருதப்படுகிறது.

இந்தியர்களின் வாழ்வில் தங்கத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது. ஆண்டுக்கு 800 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில், 33 சதவீத தங்கம் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

வளைகுடா நாடுகளில், தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அந்நாடுகளில் விலை குறைவாக உள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி இருக்கிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை மிக அதிகமாக உள்ளது.

உதாரணமாக, மார்ச் மாதம் 5 ஆம் தேதியன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 கிராமுடைய 24 காரட் தங்கத்தின் விலை 83,670 ரூபாயாக இருந்தது. அதே நாளில் இந்தியாவில் தங்கத்தின் விலை 87,980 ரூபாயாக இருந்தது.

குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது. இதன் காரணமாகவே வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுகிறது. குறிப்பாக துபாயில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்பட்டு, பிடிபட்ட செய்திகள் அடிக்கடி வருகிறது.

இந்தியாவுக்கு கடத்தப்படும் மொத்த தங்கத்தில், 10 சதவிகிதம் மட்டுமே பிடிபடுவதாக DRI டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 833 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் சுமார் 4,869.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களே தங்கக் கடத்தலில் முன்னணியில் உள்ளன. சுமார் 60 சதவீத தங்கம் கடத்தல் வழக்குகள் இம்மாநிலங்களில் தான் பதிவு செய்யப்படுகின்றன.

15 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக மத்தியஅரசு குறைத்தது. அதன்பிறகு தங்கம் கடத்தல் மிகவும் குறைந்துள்ளது என்று தங்கக் கடத்தல் தொடர்பாக Central Board of Indirect Taxes and Customs (CBIC ) தெரிவித்துள்ளது

இந்திய சட்டத்தின் படி, வெளிநாட்டில் இருந்து வரும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் கொண்டு வர முடியாது. ஒருவேளை அதிகமான தங்கத்தை எடுத்து வந்தால், அது குறித்த விவரங்களை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ரசீதையும் வைத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறினால் அது கடத்தலின் கீழ் வந்துவிடும்.

வெளிநாட்டில் இருந்து ஒரு ஆண் 20 கிராமும், ஒரு பெண் 40 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். அதற்கு எந்தவித சுங்க வரி கிடையாது.மேலும் ,15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உறவுமுறை குறித்த சான்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.

தங்கம் கொண்டு வருவதற்கான கட்டணத்தையும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) நிர்ணயித்துள்ளது. இதில், உரிய கட்டணம் செலுத்தி எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் கொண்டு வர முடியுமா? என்றால் அதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் படி, இந்தியர்கள், தங்க நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் என அனைத்து வகையான தங்கத்தையும் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு முறை தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போதும் தங்கம் கடத்தலும் அதிகரிக்கிறது. இதனால் தங்கம் இறக்குமதிக்கும் தங்கக் கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்றும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மேலும், தங்கக் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு AI தொழிநுட்பத்தையும் மத்திய அரசு பயன்படுத்திவருகிறது

Tags: Gold smuggling continues: How much gold can be brought in from abroad?தொடரும் தங்கக் கடத்தல்
Share
Tweet
SendShare
Previous Post

ஜூனியர் உலக செஸ் போட்டி : இந்திய வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம்!

Next Post

கர்நாடகாவில் இஸ்ரேல் பெண் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies