திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!
Jul 29, 2026, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 9, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுகவைச் சேர்ந்த வெளியூர் வியாபாரியை விவசாயிகள் விரட்டியடித்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சொக்கம்பட்டி, ஏரம்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

தற்போது பருத்தி வெடிக்க தொடங்கி அமோக விளைச்சலை கண்டுள்ள நிலையில், திருச்சுழியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவர் பருத்திகளை விற்பனை செய்ய உள்ளூர் வியாபாரிகளை அணுகியுள்ளார். ஒரு குவிண்டால் 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கு தருவதாக உள்ளூர் வியாபாரி கூறிய நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த வியாபாரியும் திமுகவை சேர்ந்தவருமான சத்யராஜ் என்பவர் ஒரு குவிண்டால் பருத்திக்கு 7 ஆயிரத்து 300 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தபோது எலக்ட்ரானிக் மிஷினில் எடைபோட்ட சத்யராஜ் 3 குவிண்டால் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி அடைக்கலம் வியாபாரி சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த மற்ற விவசாயிகளும் சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தனது கூலியாட்களை அழைத்து கொண்டு வியாபாரி சத்யராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். திருச்சுழி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சத்யராஜ் போன்ற வெளியூர் பருத்தி வியாபாரிகளிடம் எடை சம்மந்தமாக மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளானர்.

மேலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Farmers chased away traderdmk traderTiruchijulicotton. sales issue
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணமாலை

Next Post

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தால் தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies