திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 9, 2025, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுகவைச் சேர்ந்த வெளியூர் வியாபாரியை விவசாயிகள் விரட்டியடித்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சொக்கம்பட்டி, ஏரம்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

தற்போது பருத்தி வெடிக்க தொடங்கி அமோக விளைச்சலை கண்டுள்ள நிலையில், திருச்சுழியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவர் பருத்திகளை விற்பனை செய்ய உள்ளூர் வியாபாரிகளை அணுகியுள்ளார். ஒரு குவிண்டால் 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கு தருவதாக உள்ளூர் வியாபாரி கூறிய நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த வியாபாரியும் திமுகவை சேர்ந்தவருமான சத்யராஜ் என்பவர் ஒரு குவிண்டால் பருத்திக்கு 7 ஆயிரத்து 300 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தபோது எலக்ட்ரானிக் மிஷினில் எடைபோட்ட சத்யராஜ் 3 குவிண்டால் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி அடைக்கலம் வியாபாரி சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த மற்ற விவசாயிகளும் சத்யராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தனது கூலியாட்களை அழைத்து கொண்டு வியாபாரி சத்யராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். திருச்சுழி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சத்யராஜ் போன்ற வெளியூர் பருத்தி வியாபாரிகளிடம் எடை சம்மந்தமாக மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளானர்.

மேலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Farmers chased away traderdmk traderTiruchijulicotton. sales issue
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணமாலை

Next Post

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தால் தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies