சேலம் மாவட்டம், ஊமகவுண்டன்பட்டியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஊமகவுண்டன்பட்டியில் உள்ள 3 அம்மன் கோயில்களில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத் தாலிகள், உண்டியல் பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியுள்ளனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.