சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் - பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் பங்களிப்புடன் நடைமுறையில் இருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சிந்து நதி படுகையை நம்பி வாழும் 61 சதவீத பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தர்மேலா மற்றும் மங்ளா நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பாகிஸ்தானின் தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கோதுமை, அரிசி, கரும்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால், பாகிஸ்தானில் அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Indus RiverIndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

Next Post

உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று தொடக்கம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies