சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் - பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் பங்களிப்புடன் நடைமுறையில் இருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சிந்து நதி படுகையை நம்பி வாழும் 61 சதவீத பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தர்மேலா மற்றும் மங்ளா நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பாகிஸ்தானின் தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கோதுமை, அரிசி, கரும்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால், பாகிஸ்தானில் அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Indus RiverIndiapakistanTerrorist attackPahalgam attackjammu Kashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

Next Post

உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று தொடக்கம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies