இஸ்லாமிய மத போதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது : மலேசிய இந்திய தூதருக்கு கடிதம்!
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இஸ்லாமிய மத போதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது : மலேசிய இந்திய தூதருக்கு கடிதம்!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 02:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மற்றும் இந்து மக்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ள இஸ்லாமிய மதபோதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து அகமம் அணி இயக்குநர் அருண் துரைசாமி மலேசியாவில் உள்ள இந்தியத் தூதருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசாங்கத்திற்கும், இந்து மக்களுக்கும் எதிராக அபு தல்ஹா அல்-மலிசி என்று அழைக்கப்படும் டாக்டர் மசா என்பவர் நேரடி அவதூறு பரப்பி வருவதாகவும், மசா மீது நடவடிக்கை எடுக்க கோரி மலேசியா காவல்துறை தலைமை அலுவலகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசிய சட்டங்களின் கீழ் டாக்டர் மசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் இந்தியா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து இஸ்லாமிய விவகாரத்துறையிடம் முறையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், டாக்டர் மசாவை இந்தியாவிற்குள் நுழையவிடக் கூடாது என்றும், அவருக்கு இந்தியக் கல்வி நிறுவனங்கள் உடனான தொடர்பைத் துண்டித்து, மசாவை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் சிறுபான்மை உரிமைகள் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பொது அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இந்தியா, மலேசியா இடையேயான நீண்டகால ராஜதந்திர உறவு, மறைக்கப்பட்ட தீவிரவாத கதைகளால் பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச ராஜதந்திரம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க  இந்தியா விரைவாகச் செயல்பட வேண்டும் எனவும் இந்து அகமம் அணி இயக்குநர் அருண் துரைசாமி  கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Islamic preacher Masa should not be allowed to enter India: Malaysia writes to Indian ambassadorமலேசிய இந்திய தூதருக்கு கடிதம்
Share
Tweet
SendShare
Previous Post

உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

Next Post

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies