2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!
Sep 13, 2026, 12:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 02:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 2008ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராக செயல்பட்டதாக தஹாவூர் ராணா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவிடம்  தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டுவருக்கிறது.

இந்த விசாரணையில் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் தஹாவூர் ராணா கூறியுள்ளார்.

மேலும் 2008 தாக்குதலுக்கு முன்னதாக மும்பையில் பல பகுதிகளில் உளவு பார்த்ததாக  கூறிய  ராணா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலைத் தாக்கியபோது தான் அந்தப் பகுதியில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

வளைகுடாப் போரின் போது தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதலில் ஒரு உளவு வலையமைப்பாக உருவாக்கப்பட்டது என்று ராணா கூறினார்.

மேலும், தனது கூட்டாளியான டேவிட் ஹெட்லி, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுவுடன் பல பயங்கரவாத பயிற்சி கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத்தின் உத்தரவின் பேரில் மும்பை தாக்குதல்களுக்கான திட்டமிடல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவரது நண்பர் டேவிட் ஹெட்லியுடன் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டியது.

மும்பை தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ராணா ஈடுபட்டதாகவும், விசா பெறுவதில் ஹெட்லிக்கு உதவியதாகவும், இந்தியாவுக்குச் செல்ல ஒரு தவறான அடையாளத்தை உருவாக்கியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராணா மீது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tahawur Rana admits to being in Mumbai during the 2008 attacksதஹாவூர் ராணா ஒப்புதல்
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

Next Post

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies