தாயத்து வியாபாரி TO தாதா : "லவ் ஜிகாத்" அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!
Sep 12, 2026, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டவிரோத பணப்பரிமாற்றம், சட்டவிரோத மதமாற்றம், போலியான பெயரில் வங்கிக்கணக்குகள் என உத்தரப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்த சங்கூர் பாபாவை மாநில பயங்கரவாத தடுப்புப் படை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.  தர்கா முன்பு வளையல், தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா மதமாற்றக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டது எப்படி? பார்க்கலாம் விரிவாக.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் என்ற சங்கூர் பாபா. அண்மையில் அவரது அரண்மனை போன்ற மாளிகையை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது உத்தரப்பிரதேச அரசு.

இந்து பெண்கள், ஏழை, ஆதரவற்றோர், விதவைகள், பலவீனமான பிரிவினரை குறிவைத்து, அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்றும் நடவடிக்கையில்  ஈடுபட்டதாக சங்கூர் பாபாவையும், உடந்தையாக இருந்த அவரது கூட்டாளி நீத்து என்ற நஸ்ரினையும் கைது செய்திருக்கிறது உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை.

அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மிகவும் பிஸியான உத்ரௌலா – மான்காபுர் சாலையில் மூன்று ஏக்கர் பரப்பளவில், தனி சாலை, மின்சார வேலி என 70 அறைகளுடன்  கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடம்  இந்துப் பெண்களை மிரட்டி, மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுத்த பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லவ் ஜிகாத் மாடலில் பிராமண மற்றும் ஷத்ரிய பெண்களை மதம் மாற்ற 16 லட்சம் ரூபாய் வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களை மதம் மாற்ற 12 லட்சம் ரூபாய் வரையிலும், பிற வகுப்பினரை மதம் மாற்ற 10 லட்சம் ரூபாய் வரையிலும்  சங்கூர் பாபா தலைமையிலான கும்பல் நிதி வழங்கியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மதமாற்ற நடவடிக்கைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டப்படுவதும்,  அவரது 40 வெவ்வேறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதி அனைத்தும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், இந்தக் கும்பலுக்குத்  தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதையும் பயங்கரவாதத் தடுப்புப் படை விசாரித்து வருகிறது.

அதே நேரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சங்கூர் பாபா மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. சங்கூர் பாபாவுக்கு நிதி அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை அலசி ஆராய்ந்து வருகிறது.  சங்கூர் பாபாவின் சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் முகவர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் சாதாரண சைக்கிளில் தர்கா முன்பு வளையல், தாயத்துக்களை விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற நடவடிக்கைக்காக  மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Tags: Amulets dealer to Dada: Sangur Baba caught in "Love Jihad" atrocity
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

Next Post

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies