ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!
Jul 11, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

முடி

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், சம்பவம் நிகழ்ந்து 7 நாட்களாகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 4ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை, மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிறுமியை மர்ம நபர் கடத்திச் சென்ற சிசிடிவி வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், சம்பவம் குறித்த புகாரில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு  சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்பி சீனிவாச பெருமாள் ஏற்கெனவே இரண்டு தனிப்படைகள் அமைத்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா 3 தனிப்படைகள் அமைத்தார்.

மொத்தம் 5 தனிப்படை போலீசார், குற்றவாளியைத் தேடி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஆய்வு மேற்கொண்டார்.

Tags: திருவள்ளூர் மாவட்டம்Arambakkam girl sexually assaulted: Accused has not been arrested even after 7 daysஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைகும்மிடிப்பூண்டி
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

Next Post

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

Related News

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies