ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
Jun 14, 2026, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

கோயிலின் நுழைவாயில் பெண்கள் நெய் தீபங்கள் ஏற்றியும், தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். சில பக்தர்கள் குழந்தையைக் கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்குத் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், எலுமிச்சம் பழம், உப்பு ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள், விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், பச்சை மஞ்சளை அம்மியில் அரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. 500 கிலோ பச்சை மஞ்சளை 67 அம்மிகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அரைத்துக் கொடுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் வண்டியூர் மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மன் ஆடிப்பூர சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags: பக்தர்கள் சுவாமி தரிசனம்First Friday of the month of Aadi: Devotees have darshan of Swami at Amman templesஅம்மன் கோயில்வெள்ளி கிழமைஆடி
ShareTweetSendShare
Previous Post

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

Next Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies