ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

கோயிலின் நுழைவாயில் பெண்கள் நெய் தீபங்கள் ஏற்றியும், தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். சில பக்தர்கள் குழந்தையைக் கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்குத் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், எலுமிச்சம் பழம், உப்பு ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள், விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், பச்சை மஞ்சளை அம்மியில் அரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. 500 கிலோ பச்சை மஞ்சளை 67 அம்மிகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அரைத்துக் கொடுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் வண்டியூர் மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மன் ஆடிப்பூர சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags: பக்தர்கள் சுவாமி தரிசனம்First Friday of the month of Aadi: Devotees have darshan of Swami at Amman templesஅம்மன் கோயில்வெள்ளி கிழமைஆடி
Share
Tweet
SendShare
Previous Post

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

Next Post

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies