"அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!
Aug 6, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் எந்தெந்த பகுதிகள் தகர்க்கப்பட்டன, எந்தெந்த விமானங்கள் வீழ்த்தப்பட்டன, எத்தனை முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் இந்திய ராணுவம் வெளியிட்டது.

இத்தனை பெரிய தோல்வியை அடைந்திருந்தாலும், எதுவும் நடக்காதது போல் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பேசி வருகிறது. நேரடி போரில் பலத்த அடி வாங்கியபோதும், பாகிஸ்தான் வார்த்தை போரை இதுவரை நிறுத்தவில்லை. குறிப்பாக, அதன் ராணுவ தளபதி அசீம் முனீர் தொடர்ச்சியாக இந்தியாவை சீண்டியபடியே உள்ளார்.

கடந்த 2 மாதத்தில் 2வது முறையாக அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், தொடர்பே இல்லாமல் இந்தியா குறித்து பேசத் தொடங்கினார். சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டுவதற்காகத் தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாகவும், அவ்வாறு அணை கட்டினால் அதனைத் தகர்த்தெறிவோம் எனவும் கூறினார்.

சிந்து நதி இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல எனப் பேசிய அசீம் முனீர், 10 ஏவுகணை செலுத்தி அணையைத் தரைமட்டமாக்குவோம் என தெரிவித்தார். மேலும், இந்தியாவிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், உலகின் பாதியை அழித்துவிடுவோம் எனவும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நூற்றுக்கணக்கான ட்ரோன்களை, ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் செலுத்தியது. அதில் ஒன்று கூட இலக்கை அடையவில்லை. அதற்கு முன்பாகவே அவை அனைத்தையும் இந்திய ராணுவம் வானிலேயே சுட்டுவீழ்த்தியது. நிலைமை இவ்வாறு இருக்க, உலகத்தின் பாதியை அழிப்போம், அணையை உடைப்போம் எனப் பாகிஸ்தான் பேசி வருவது நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.

இதனிடையே, அசீம் முனீரின் பேச்சுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அணு ஆயுத மிரட்டல்களை விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான் எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் இது போன்ற பொறுப்பற்ற கருத்து குறித்து சர்வதேச சமூகமே ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், பயங்கரவாதிகளுடன் கரம்கோா்த்துக்கொண்டு செயல்படும் ஒரு நாட்டின் அணுஆயுத செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுவதாக, வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணியமாட்டோம் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதறகான அனைத்து நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags: "We will never fear the threat of nuclear weapons" - India responds to Pak threat!india vs pakistanpakistan news todayPakistan Army Chief Asim Munir on nuclear threat: We will never be afraid - India is determinedtoday india
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

Next Post

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies