கவின் ஆணவ கொலை - வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 12, 2025, 06:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆணவக் கொலை வழக்கில் கடந்த 7-ம் தேதி சிறையில் உள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவலில் எடுத்து விசாரணை செய்ய நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்திருந்தது.

நீதிபதி ஹேமா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எப்படி அழைத்துச் செல்கிறோமோ அதேபோல மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என சிபிசிஐடி சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

மேலும், இருவரையும் நாளை மாலை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்ப்படுத்த வேண்டும் என ஆணையிட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் சுர்ஜித், சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த, சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவலில் எடுக்கப்பட்டுள்ள இருவரிடமும் கவின் கொலைக்கான காரணம், பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் கொலை சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையின்போது சுர்ஜித் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

Tags: CBCIDSaravananSurjithNellai District Special CourKavin honor murder case
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Next Post

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies